• vilasalnews@gmail.com

சீனா வழி​யாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் தூத்​துக்​குடி இளைஞர்!

  • Share on

சீனா வழி​யாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் தூத்​துக்​குடி இளைஞர் வெங்கட சுப்பிரமணியன் நல்லசாமிக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


தூத்​துக்​குடி மாவட்​டம் கழுகுமலை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன் நல்​ல​சாமி (26). பட்​ட​தா​ரி​யான இவர் உலகின் உயர​மான 3 சிகரங்களை ஏறி சாதனை படைத்​துள்​ளார்.


ஏற்​கெனவே ஐரோப்​பா​வின் உயர​மான சிகர​மான மவுன்ட் எல்ப்​ரஸ் (5,642 மீட்​டர்), தென்அமெரிக்​கா​வின் உயர​மான சிகர​மான மவுன்ட் அக்​கோன்காகுவா (6,961 மீ.), ஆப்பிரிக்​கா​வின் உயர​மான சிகர​மான மவுன்ட் கிளிமஞ்சாரோ (5,895 மீ.) ஆகியவற்​றில் வெற்​றிகர​மாக ஏறி சாதனை படைத்​துள்ள அவர், உலகின் 7 கண்​டங்​களின் மிக உயர​மான சிகரங்​களை தொடுவது என்ற இலக்கை நோக்கிப் பயணிக்​கிறார்.


அருணாச்சல பிரதேசத்​தில் உள்ள மலை ஏறு​தல் பயிற்சி நிறுவனத்​தில், மலை​ஏறு​தல் பயிற்​சியை முடித்​துள்​ளார். தமிழகத்​தைச் சேர்ந்த 4 பேர் இதுவரை எவரெஸ்ட் சிகரத்தை நேபாளம் வழி​யாக ஏறி சாதனை படைத்​துள்​ளனர்.


தற்​போது, வெங்கட சுப்​பிரமணியன் நல்​ல​சாமி புதிய முயற்​சி​யாக வரும் ஏப்​ரல் 2-ம் தேதி சீனா வழி​யாகப் பயணித்து எவரெஸ்ட் சிகரத்தை அடை​யத் திட்டமிட்டுள்ளார்.


இந்த மலை​யேற்​றப் பாதை​வழியாக எவரெஸ்ட் சிகரத்துக்குச் செல்​லும் முதல் தமிழக வீரர் என்ற பெருமை வெங்கட சுப்​பிரமணி​யன் நல்லசாமிக்கு கிடைத்​துள்​ளது.


அவரை சுகா​தா​ரத் துறை அமைச்சர் மா.சுப்​பிரமணி​யன் நேரில் அழைத்​துப் பாராட்​டி, வாழ்த்து தெரி​வித்​தார். இளைஞர் வெங்கட சுப்பிரமணியன் நல்லசாமியின் புதிய சாதனை வெற்றிபெற வேண்டும், மேலும் அவர் பல சாதனைகளை புரிய வேண்டும் என்று அமைச்சர் வாழ்த்தினார்.

  • Share on

ஆணையர் ப்ரியங்கா தலைமையில் பெண்கள் அணியா? மேயர் ஜெகன் தலைமையில் ஆண்கள் அணியா? களை கட்டிய தூத்துக்குடி மாநகராட்சி வளாகம்!

சூரங்குடியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் : இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!

  • Share on