• vilasalnews@gmail.com

பக்கிள் ஓடை பணியால் குடிநீர் குழாயில் உடைப்பு: குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த மேயர் அறிவுறுத்தல்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணியின் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார் .


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பக்கிள் ஓடை அகலப்படுத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இப் பணிகளின் போது, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட புதிய பேருந்து நிலையம், கலைஞர் பூங்கா, வி.எம்.எஸ். நகர், ஆர்.எஸ்.பி.ஆர். நகர், ஆதிபராசக்தி நகர், கங்கா பரமேஸ்வரி காலனி, சுப்பையா பூங்கா, லூர்தம்மாள்புரம், டி.எம்.சி. காலனி ஆகிய பகுதிகளுக்கும்; கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வி.வி.டி. பூங்கா, குருஸ்புரம் ஆகிய பகுதிகளுக்குமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குச் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது 


இக்குடிநீர் குழாய் உடைப்பைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் முழுமையாக முடிவடைவதற்குக் இன்னும் இரு நாட்கள் ஆகும் என்பதால் பொதுமக்கள் சிரமத்தைப் பொறுத்துக் கொண்டு, குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

  • Share on

தவெக தலைவர் விஜய்க்கு மிரட்டல்: விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு வழிகாட்டுதல் முகாம் : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்!

  • Share on