• vilasalnews@gmail.com

ஆதீன சொத்துக்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on

தமிழகத்தில் உள்ள ஆதீன மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடுத்த 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை நிறுவனர் ஏ.ராதாகிருஷ்ணன், கடந்த 2018-ம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குன்றம் செங்கோல் ஆதீனத்திற்குச் சொந்தமான ஏராளமான சொத்துகள் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ளன. இந்தச் சொத்துகள் அனைத்தும் தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருப்பதால், அவற்றை உடனடியாக மீட்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.


இந்த மனுவை முதலில் விசாரித்த மதுரை கிளை, இது ஒரு மடத்தின் பிரச்சனை மட்டுமல்ல என்று கருதியது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் அவற்றின் மடாதிபதிகளை இந்த வழக்கில் இணைத்து, அவர்களின் சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


பின்னர் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வார காலத்திற்குள் அதிகாரிகள் அகற்ற வேண்டும்.


மடங்களின் சொத்துகளைப் பாதுகாப்பதில் அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட வேண்டும். இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பில் உள்ள மடத்தின் சொத்துகளை மீட்பதற்கான பணிகளை அறநிலையத் துறை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share on

முற்றுப் பெற்றது ஒரு நேர்மையின் சகாப்தம்... கண்ணீரில் தமிழகம்!

தமிழகத் தேர்தலுக்கான புதிய நடைமுறைகள் அறிவிப்பு : தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

  • Share on