• vilasalnews@gmail.com

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  தலைமையில் இன்று (27-12-2021) நடைபெற்றது.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து ஆட்சியர் செந்தில்ராஜ் பெற்றுக்கொண்டார். மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 

மேலும், முதலமைச்சரின் தனி பிரிவு மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மகளிர் திட்ட திட்ட இயக்குநர் வீரபத்திரன், உதவி ஆணையர் கலால் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முறைகேடு : விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

30 பள்ளிக் கூடங்களில் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு!

  • Share on

அண்மை பதிவுகள்