• vilasalnews@gmail.com

தடுமாறும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்... கவலை தோய்ந்த முகத்தோடு தேமுதிகவினர்!

  • Share on

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.


திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக, மக்கள் நீதி மய்யம் ஆகியவை உள்ளன.


இந்த கூட்டணியில் தேமுதிக, ராமதாஸ் பாமக ஆகியவை இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது போல் தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளும் இணையும் என சொல்லப்படுகிறது.


இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஏற்கெனவே திமுக கூட்டணியில் இருக்கிறது, கடந்த 2021 ஆம் ஆண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பண்ருட்டி எம்எல்ஏவாக வேல்முருகன் இருந்து வருகிறார். ஆனால் அவர் திமுகவுடன் பல்வேறு தருணங்களில் முரண்டு பிடித்ததால் அவர் கூட்டணியில் இருப்பாரா இல்லையா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.


அது போல் நாம் தமிழர் கட்சி, தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தனித்து போட்டியிட்டு வருகிறது. அது போல் இந்த முறையும் அதே நிலை தான். விஜய்யின் தவெகவை எடுத்துக் கொண்டால் என்னதான் கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு என விஜய் கூவி கூவி அழைத்தும் யாரும் கூட்டணிக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் அக்கட்சியும் தனித்தே போட்டி என சொல்லப்படுகிறது.


தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், அன்புமணி தலைமையிலான பாமக, டிடிவி தினகரனின் அமமுக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி தலைவர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் கட்சி, திருமாறன் ஜியின் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.


இந்த நிலையில், கடந்த காலங்களை போலவே, தேர்தல் சமயத்தில் கடைசி வரை திமுக, அதிமுக என இருகட்சிகளிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாலும், ஒரு கூட்டணியில் நிலையாக விசுவாசமாக நில்லாமல் இருப்பதாலும், கட்சியை தேர்தல் வியாபார களத்தில் சீட்டுக்காக விலை பேசுவது போல தேதிமுக பொதுச்செயலாளர் பிரேமலதா இருப்பதால், தேமுதிக நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வருகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் தேர்தல் என்றாலே திருவிழாவாக பார்க்கப்படும் நிலையில், அந்த திருவிழாவில் கவலை தோய்ந்த முகத்தோடு இருப்பவர்கள் தேமுதிகவினர் மட்டும் தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

  • Share on

ஓபிஎஸ்ஸை விட்டு விலகியது ஏன்? திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொன்ன பதில்!

தவெக vs என்.டி.ஏ - தமிழக அரசியலில் வெடித்தது மோதல்!

  • Share on