தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் மற்றும் புதுவாழ்வு சங்கம் சார்பில் ரூ.16.50 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் மற்றும் புதுவாழ்வு சங்கம் சார்பில் ரூபாய் 1,639,300 லட்சம் மதிப்பிலான கொரோனா சிகிச்சைக்கான நிவாரண உதவி பொருட்களை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரிடம் நிறுவன இயக்குனர் மோகன் சி லாசரஸ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன், திமுக பொதுக்குழு உறுப்பினர் என்பி.ஜெகன் மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.




