• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஒரே நாளில் 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேர் இன்று ஒரே நாளில் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களான முருகேசன் (59),  இசக்கிராஜா (22) மற்றும் விருதுநகரை சேர்ந்த கோபால்சாமி (47) ஆகியோர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.


அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் 3 பேர் இன்று (20.02.2026) சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


இந்த ஆண்டு இதுவரை 25 ர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Share on

ஸ்டெர்லைட் விவகாரம்... கிரீன் காப்பர் என்ற பெயரில் நுழைய முயற்சி? துரை வைகோ எம்.பி. கடும் எச்சரிக்கை!

டச்சு ஆவணங்களில் கீழ்பட்டினம்: ஆங்கிலேயர் காலத்தில் தருவைகுளமாக மாறிய பெயர் - தொல்லியல் ஆர்வலர் தகவல்!

  • Share on