• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் திடீர் பரபரப்பு: தாசில்தார்கள் சாலையில் அமர்ந்தது ஏன்?

  • Share on

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நடத்திய அதிரடி போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இந்த போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.


தமிழக அரசு உடனடியாக 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு ஊழியர்கள் திரண்டு வந்தனர். இந்தப் போராட்டத்திற்கு தாசில்தார்கள் ஞானராஜ், செல்வகுமார், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை உயரதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.


அரசு ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேரணியாகச் சென்று, நகரின் முக்கிய பகுதியான பெரியார் சிலை முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் போராட்டக்காரர்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். பின்னர், மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்டோரை  போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


இந்தப் போராட்டத்தால் தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

  • Share on

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பணம் தர மறுத்த முதியவருக்கு கத்திக்குத்து!

சவலாபேரியில் ரூ.7 லட்சத்தில் புதிய கலையரங்கம்... திறந்து வைத்த பிரியா குருராஜ்!

  • Share on