பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது திருவுருவச் சிலைக்கு மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, மதிமுக வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் பேச்சிராஜ், மாநகர அவைத் தலைவர் தொம்மை, மாநகர துணை செயலாளர் முருகேசன், இளைஞரணி அமைப்பாளர்கள் சரவணப்பெருமாள் பாலசுப்பிரமணியன், எம்எல்எப் குமார், மதிமுக பிரதிநிதி பொய்யாமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



