ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சவலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை 18 மாணவிகளுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி.சண்முகையா வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு அரசால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து எம்ல்ஏ உரையாற்றினார்.
இந்நிகழ்வில், பள்ளி உதவி தலைமை ஆசிரியை சாமிலி, வருவாய் ஆய்வாளர் மாதவன், முன்னாள் திட்ட அலுவலர் தேவேந்திரன், கருங்குளம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுரேஷ்காந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல உறுப்பினர் ராஜேந்திரன், கிளை பிரதிநிதி செந்தூர்பாண்டி மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



