தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம், தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் உள்ள பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு ஊர்த்தி ஓட்டுநர் சங்க அலுவலகத்தில் வைத்து இன்று ( 7.12.25 ) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஓட்டுநர்கள் முன்னிலையில் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதியதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட நிர்வாகிகளின் விபரம் பின்வருமாறு:-
மாவட்ட தலைவராக விளதை செல்வராஜ் (ஊரக வளர்ச்சி துறை ), மாவட்ட செயலாளராக ராஜ்குமார் ( மீன்வளத்துறை ), மாவட்ட பொருளாளராக ஜெயசீலன் ராஜ்குமார் ( ஊரகவளர்ச்சி துறை )
மாவட்ட துணைத் தலைவராக நகர்புறம் குணசிங்மைக்கிள்ராஜ் ( ஊரக வளர்ச்சித் துறை ), மாவட்ட துணைத் தலைவராக புறநகர் லெட்சுமனண் ( மருத்துவ துறை ), மாவட்ட துணைச் செயலாளராக முருகன் ( நெடுஞ்சாலைதுறை )
மாநில செயற்குழுஉறுப்பினராக வேல்முருகன் ( மருத்துவதுறை ), மாவட்ட கொள்கை பரப்பு செயலாளராக லிங்கம்பிரபாகரன் ( ஊரக வளர்ச்சித்துறை ), மாவட்டதனிக்கையாளராக லட்சுமிசிபிகாந்தன் ( வருவாய்த்துறை ), மாவட்ட அமைப்புசெயளாளராக ஜோதிமுத்து ( மருத்துவதுறை ) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



