திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் திருச்செந்தூர் கோவிலில் பெண் ஒருவர் நடனமாடி, ரீல்ஸ் எடுத்தது சர்ச்சைக்குள்ளான நிலையில் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், கோவில் வளாகத்திற்குள் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.




