மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 10.10.2025 அன்று தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்செந்தூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுடலைகண் மகன் கார்த்திக் (26), சாத்தான்குளம் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் ஆறுமுகம் (51) ஆகிய 2 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (16.11.2025) மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



