தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக இன்று (அக்டோபர் 16 ) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தொடர்மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.



