• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நாளை மின்தடை... இந்த ஏாியா மக்களே நோட் பண்ணிக்கோங்க!

  • Share on

தூத்துக்குடியில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 22) தூத்துக்குடியில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், 110/22KV சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2025) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.


அதன் காரணமாக மடத்தூர், மடத்துர் மெயின் ரோடு,முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ் நகர், சின்னமணி நகர், 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள் ராஜகோபால் நகர், பத்திநாதபுரம், சங்கர் காலனி, எப்சிஐ குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ் புரம், மதுரை பைபாஸ் ரோடு, 


ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்புரமணிய புரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜ ரத்தின நகர், பாலையாபுரம், வி. எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், என்ஜிஓ காலனி, அன்னை தெரசா நகர், பர்மா காலனி, டிஎம்பி காலனி, அண்ணா நகர் 2வது மற்றும் 3 வதுதெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், 


புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபை நகர்,அகில இந்திய வானொலி நிலையம், ஹரி ராம் நகர், கணேஷ் நகர், புஷ்பா நகர்,கல்லூரி நகர் ஸ்டெர்லைட் குடியிருப்புகள், எட்டையபுரம் ரோடு வடபகுதி, டிமார்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 443வது திருவிழா...முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு ஒன்றிணைந்து வந்த நாடார், இந்து அமைப்புகள்!

  • Share on