• vilasalnews@gmail.com

குடும்ப அட்டையில் சிக்கலா? இதோ தீர்க்க வழி!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான சிறப்பு முகாம் 14.06.2025 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஜூன் -2025 மாதத்திற்கான சிறப்பு முகாம் 14.06.2025 அன்று இரண்டாவது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. 


இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம். பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. 


மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். 


மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி கிராமப்புற இளைஞர்களுக்கு முக்கிய தகவல் கொடுத்த கலெக்டர்!

தூத்துக்குடியில் செயற்கை புல்தரையுடன் புதிய விளையாட்டு மைதானம்!

  • Share on