தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பகுதியில் உள்ள தெருக்களில் கொடிய விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 14 வது வார்டு சின்னக்கண்ணுபுரத்தை சுற்றி உள்ள பகுதி தெருக்களில் அடிக்கடி காலிமனையில் உள்ள முள்புதர்களில் கொடிய விஷம் உள்ள பாம்புகள், தேள்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள், வயதானவர்கள் என பலரும் தெருக்களில் பகலில் கூட நடமாட அச்சமாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் அவற்றை அகற்றுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள், அப்பகுதி பொதுமக்கள் நல சங்கத்தினர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



