ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மருதன்வாழ்வு ஊராட்சி N.புதூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், சித்தார்த்தன், உதவி பொறியாளர் பால நமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் முருகலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சுடலைகண்ணன்,
திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், கிளை செயலாளர் பாலவிநாயகம், N.புதூர் நளன்அரசு, துரைபாண்டியன், ஆயிரங்காத்தான் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



