• vilasalnews@gmail.com

மனம் மகிழ்கிறோம்... தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து நெகிழ்ந்த பொதுமக்கள்!

  • Share on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை, மேயராக பொறுப்பேற்றதில் இருந்து திறம்பட செயலாற்றி வருகிறார் மேயர் ஜெகன்பெரியசாமி.


அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரையன்ட் நகர் 13 வது தெரு மேற்கு தொடர்ச்சி பாரதி நகர் பகுதியில் புதிய குடிநீர் குழாய், சாலை மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு ஆகிய பணிகளை முடித்துக் கொடுத்ததற்காக, அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து தங்களது மனம் மகிழ்ந்துள்ளதாக கூறி நெகிழ்ச்சி பட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். 


இதில், திமுக வட்ட  செயலாளர்கள் சுரேஷ், சரவணன், வட்ட துணை செயலாளர்கள் பக்கிரிசாமி, கணேசன் மற்றும் சேவியர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1500 கிலோ பீடி இலைகள் பறிமுதல் : ஒருவர் கைது!

அயிரவன்பட்டி கிராமத்தில் புதிய அங்கன்வாடி : சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்

  • Share on