• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி மிரட்டி பைக் பறிப்பு : 2பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளரை  கத்தியைக் காட்டி மிரட்டி இரண்டு சக்கர வாகனத்தை பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி தெற்கு சங்கரபேரியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் உத்தண்டு முருகன் (22), இவர் தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் சொந்தமாக டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். நேற்றிரவு வேலை முடிந்து ஜோதி நகர் விலக்கு அருகே உள்ள எம்ஆர்எப் டயர் கம்பெனி அருகே வரும்போது கருப்பு கலர் பல்சர் பைக்கில் வந்த மர்ம நபர்கள் கத்தி மற்றும் அருவாளை காட்டி மிரட்டி முருகனின் இருசக்கர வாகனத்தை பறித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து அவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் வாகன சோதனையில் ஈடுபட்டபோது பைக்கை பறித்துச் சென்ற, பிரையண்ட் நகர் 4வது தெருவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் சதீஷ் என்கிற மோசஸ் (21), குருவி மேடு, பிரையண்ட் நகர் 12வது மேற்கு பகுதியை சேர்ந்த ஜெயராமன்  மகன் கருப்பசாமி (19) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

முத்தையாபுரத்தில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது!

தூத்துக்குடியில் பேக்கரி உரிமையாளருக்கு கத்திக்குத்து : 2 பேர் கைது

  • Share on

அண்மை பதிவுகள்