• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மீன் வியாபாரியை தாக்கி ரூ.1½ லட்சம் கொள்ளை : வழிப்பறியில் ஈடுபட்டு மர்ம நபர்கள் கைவரிசை!

  • Share on

தூத்துக்குடியில் மீன் வியாபாரியை தாக்கி ரூ.1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி தாமஸ்நகரை சேர்ந்தவர் சுந்தர் (50). மீன் வியாபாரி. இவர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை ஏலம்விடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு ஏராளமான மீனவர்கள் படகில் பிடித்துவந்த மீன்களை ஏலம்விடும் பணி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான வியாபாரிகள் பங்கேற்றனர். மீனவர்களிடம் இருந்து மீன்களை வாங்கி அதனை சுந்தர் ஏலம்விட்டார். பின்னர் ஏலப்பணம் ரூ. 1½ லட்சத்துடன் இன்று அதிகாலை வீடு திரும்பினார்.

அவர் மீன்பிடி துறைமுகம் அருகே சென்ற போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் அவரை வழிமறித்தனர். பின்னர் சுந்தரை தாக்கி அவரிடம் இருந்து ரூ. 1½ லட்சம் பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இது தொடர்பாக சுந்தர் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து மர்மவாலிபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • Share on

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது - ரூ. 50,000 மதிப்பிலான இருசக்கர வாகனம் மீட்பு!

டீசல் திருடி கையுங்களவுமாக பிடிபட்டவர் கைது - 21 லிட்டர் டீசல் மீட்பு

  • Share on

அண்மை பதிவுகள்