• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தைப்பூச இருமுடி விழா: மேல்மருவத்தூருக்கு செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் தொடக்கம்

  • Share on

தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூருக்கு தூத்துக்குடி மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.

மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச இருமுடி விழா டிசம்பர் 13ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. தைப்பூச இருமுடி விழாவில் கலந்துகொள்ள தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்களில் இருந்து செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டிச்செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.

சக்தி மாலை அணியும் நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் சக்திமுருகன் தொடங்கிவைத்தார். தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், உடன்குடி, ஓட்டப்பிடாரம், கடம்பூர், கோவில்பட்டி, மந்திதோப்பு, விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், முத்துசாமிபுரம், எட்டையபுரம், கழுகுமலை, பிள்ளையார்நத்தம் உட்பட மாவட்டம் முழுவதும் சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி தொடங்கியது. சக்தி மாலை இருமுடிகட்டிச் செல்லவிரும்பும் பக்தர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் / சக்தி பீடங்களை தொடர்புகொள்ளலாம். அதிவேக இரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல தெற்கு இரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க துணைத்தலைவர் பண்டார முருகன், செயலாளர் செந்தில் சுப்ரமணியன், பொருளாளர் கண்ணன், மகளிர் அணி பத்மாவதி, வேள்விக்குழு கிருஷ்ண நீலா, இளைஞர் அணி செல்லத்துரை, தணிக்கை குழு வேலு, பிரச்சாரம் முத்தையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 10 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்டு ஒப்படைப்பு!

பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி : அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

  • Share on

அண்மை பதிவுகள்