• vilasalnews@gmail.com

பங்குனி உத்திரம்: தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையா? - இந்து முன்னணி தீர்மானம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் இசக்கி முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, நெல்லை கோட்டச் செயலாளர் பிரம்மநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டப் பொதுச் செயலாளர்கள் நாராயண ராஜ், சரவணகுமார் உட்பட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தன்று குலதெய்வ வழிபாடுகள் அதிகளவில் நடைபெறுவதால், அண்டை மாவட்டமான நெல்லையைப் போலவே இங்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். பல ஆண்டுகளாகப் பணிகள் நடைபெற்று வரும் பழமை வாய்ந்த ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டே நடத்தி முடிக்க வேண்டும். பீச் ரோடு பகுதியில் உரிய அனுமதியின்றி புதிய வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.


மேலும், பக்கிள் ஓடை முதல் மூன்றாம் மைல் வரையிலான சிதிலமடைந்த சாலைகளைப் புதுப்பிக்கவும், 'தூய்மை பாரதம்' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகளை முறையாகப் பராமரிக்கப் பணியாளர்களை நியமிக்கவும் வலியுறுத்தப்பட்டது. 


மீனவர்களுக்கான மானிய டீசல் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்கவும், இரவு நேரங்களில் பைக் ரேஸில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்களின் வாகன உரிமத்தை ரத்து செய்யவும் இக்கூட்டத்தின் வாயிலாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. 

  • Share on

ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா தலைமையில் கருங்குளத்தில் சமுதாய வளைகாப்பு!

வேலை முடிந்து வீடு திரும்பியபோது விபத்து: தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் வாலிபர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சோகம்!

  • Share on