தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 20ஆம் தேதி வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசடி துணைமின் நிலையத்தில் நாளை 20ஆம் தேதி வியாழன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மேல அரசடி, கீழ அரசடி, தருவைகுளம், தருவைகுளம் உப்பள பகுதிகள் பட்டிணமருதூர், பட்டிணமருதூர் உப்பள பகுதிகள், சில்லாநத்தம், சாமிநத்தம், வேலாயுதபுரம், வாலசமுத்திரம், கிழக்கு கடற்கரை சாலை, புதூர் பாண்டியபுரம், எட்டையாபுரம் ரோடு வடபுறம் பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




