தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்டம், கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வல்லநாட்டில் அமைந்துள்ள அவருடைய திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணைத் தலைவரும், மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞருமான செந்தில்குமார் பிரபு மற்றும் ஒன்றிய தலைவர் பேச்சிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் ஒன்றிய தலைவர் நங்கமுத்து முன்னிலை வகித்தார்.

இதில், அரசு தொடர்பு மாவட்டச் செயலாளர் தங்கம் ஹோட்டல் பரமசிவம், முருகன், தம்பான், சீனிவாசன், சுடலைமுத்து, செந்தூர்பாண்டியன், மாரி ஒன்றிய நிர்வாகிகள் முருகையா, ஜோதி, மாரியப்பன், ஆறுமுகம், பூல் பாண்டி, இசக்கி சங்கர், சித்திரை குமார், நல்லசிவம், சீனிவாச பெருமாள், மாரிமுத்து, மகளிர் அணி நிர்வாகிகள் ஆறுமுகத்தாய், கிருஷ்ணவேணி, ரேவதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




