இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகர் மற்றும் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் மகேஸ்வரி ஆகிய இருவரும் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த உமரிக்காட்டை சேர்ந்த A.பிரபாகர், இந்து அன்னையர் முன்னணி பொறுப்பில் இருந்த அவரது மனைவி P.மகேஸ்வரியும் ஆகிய இருவரும் இயக்க கட்டுப்பாடை மீறி செயல்பட்டதால், இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவர்களுக்கும் இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் முன்னணிக்கும் இனி எவ்வித சம்மந்தமும் இல்லை என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




