மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவின் படி மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்றம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் எஸ்.பி. வாரியார் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வின் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மாநிலத் துணைத் தலைவர் தனசேகர் டேவிட் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும், ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் ரமேஷ் பாண்டியன், சார்லஸ் முனீஸ்வரன், ஆனந்த், சரவணகுமார், செல்வம் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டன




