• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆக., 5ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு!

  • Share on

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு வருகிற 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5 ஆம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2025 செவ்வாய் கிழமை தூத்துக்குடி மாவட்ட முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 


எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிச் சட்டத்தின்படி (Negatiable    Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக 09.08.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

  • Share on

நிறைவேற்றி தருகிறார்... நிறைவான கிராம மக்கள்!

இந்த ரூட்டில் போங்க... தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம் : காவல்துறை அறிவிப்பு!

  • Share on