• vilasalnews@gmail.com

தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

  • Share on

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26 ஆம் தேதி 09.06.2025 திங்கள்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26-ம் தேதி 09.06.2025 திங்கள்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி ((Negotiable Instrumerts Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த விடுமுறைக்குப் பதிலாக 14.06.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத்  தெரிவித்துள்ளார்.

  • Share on

ஓட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

தூத்துக்குடியில் போதை ஆசாமி ஓட்டி வந்த கார் மோதி 3 பேர் காயம்!

  • Share on