• vilasalnews@gmail.com

பள்ளி மாணவ மாணவிகளுக்கு கையடக்க கணினி : சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்!

  • Share on

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் வளமிகு வட்டாரங்கள் வளர்ச்சித் திட்டம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 


இவ்விழாவில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  சண்முகையா கலந்து கொண்டு 11 பள்ளிகளைச் சார்ந்த 80 மாணவ மாணவிகளுக்கு கையடக்க கணினிகளை வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட திட்ட அலுவலர் முனியசாமி, பள்ளி தலைமை ஆசிரியை அன்னலட்சுமி, வட்டார கல்வி அலுவலர் பவனிந்தீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் தடிக்காரன், ஜேக்கப், ஜார்ஜ்குட்டி, வெள்ளத்துரை, கோபால், கிருஷ்ணசாமி, கருப்பசாமி, மாடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முத்துநகா் விரைவு ரயில் கிளம்பிய நேரத்தில் நேர்ந்த சோகம்!

தூத்துக்குடியில் 7 ஆண்டு தண்டனை பெற்றவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்த மதுரை உயர்நீதிமன்றம்!

  • Share on