• vilasalnews@gmail.com

கூட்டாம்புளி இளைஞர் கொலை வழக்கு : 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

  • Share on

கூட்டாம்புளி பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளி பொன்நகரை சேர்ந்தவர் வெள்ளக்கண்ணு (வயது 26). இவரது தந்தை முருகேசன் கூட்டாம்புளி பிரதான சாலையில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.


வெள்ளக்கண்ணுவுக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி காலை வீட்டின் முன்பாக வெள்ளக்கண்ணு நின்று கொண்டிருந்தார்.


அப்போது அங்கு கும்பல்  வெள்ளக்கண்ணுவை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். அப்போது வெள்ளக்கண்ணுவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்து வெளியே ஓடி வந்த அவரது தம்பி, வெள்ளக்கண்ணுவை கும்பல் தாக்குவதை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அவரும் படுகாயம் அடைந்தார். 


இந்த கொலைச்சம்பவ வழக்கில் சம்பந்தப்பட்ட  புதுக்கோட்டை பூதம்மாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் சதீஷ்குமார் (25), சாயர்புரம் தெற்கு கோவன்காடு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் ராஜ்குமார் (24), முத்தையாபுரம் பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் சேர்மபாண்டி (29) மற்றும் குரும்பூர் சேதுக்குவாய்த்தான் பகுதியைச் சேர்ந்த சேதுபதி மகன் நிஷாந்த் (எ) சடையசூர்யா (22) ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில், இன்று (06.01.2025) புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Share on

ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி வீரநாயக்கன்தட்டு பகுதி சாலை பணிகள் விரைவில் தொடங்குகிறது - திமுக நிர்வாகி தகவல்!

  • Share on