தூத்துக்குடி - மைசூரு, நாகர்கோவில் - கோவை இரு ரயில்களும் கூடுதல் நிறுத்தத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் திருவிழாவை முன்னிட்டு தென்னக ரயில்வே சார்பில் பக்தர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16235) வருகிற ஜனவரி மாதம் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஊஞ்சலூரில் ஒரு நிமிடம் மட்டும் நின்று செல்லும்.
மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வ.எண்.16236) வருகிற ஜனவரி மாதம் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஒரு நிமிடம் மட்டும் நின்று செல்லும். நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில் (வ.எண்.16321/16322) இரு மார்க்கங்களிலும் வருகிற ஜனவரி மாதம் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஊஞ்சலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் மட்டும் தற்காலிகமாக நின்று செல்லும்.



