• vilasalnews@gmail.com

வாக்கு எண்ணிக்கை - சத்தீஸ்கர், ராஜஸ்தான், ம.பி.யில் பாஜக அமோகம் - தெலுங்கானாவில் காங். முன்னிலை!

  • Share on

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக அமோக முன்னிலையில் உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.

தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (டிசம்பர் 4) நடைபெறும்.

தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில், 71.07 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் 3-வது முறையாக சந்திரசேகர ராவ் ஆட்சியை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் காங்கிரஸ் கட்சி சந்திரசேகர ராவுக்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளது.

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இங்கு ஆளும் பாஜக ஐந்தாவது முறையாக ஆட்சியை தொடர முயல்கிறது. இதை முறியடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்துள்ளது. இங்கு இதரகட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக, காங்கிரஸுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவியது. தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை வெளியிட்ட நிறுவனங்களில் சில மீண்டும் பாஜக ஆட்சி எனக் குறிப்பிட்டன. மத்தியப் பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 116 இடங்களே தேவைப்படும் சூழலில் பாஜக 162 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில், கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. எஞ்சிய 199 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இந்த முறை ஆட்சியை தக்கவைப்போம் என காங்கிரஸ் நம்புகிறது. அடுத்த ஆட்சியை அமைக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டது.  ஆனால் காலை 11.30 மணி நிலவரப்படியே பாஜக பெரும்பான்மைக்கு தேவையான 100 இடங்களைக் கடந்து முன்னிலை வகிக்கிறது.

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு கடந்த நவ.7-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. நவ.17-ம் தேதி இரண்டாவது கட்டமாக மீதமுள்ள தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரு கட்ட தேர்தல்களையும் சேர்த்து சத்தீஸ்கர் தேர்தலில் 76.31% வாக்குகள் பதிவாகியிருந்தது. ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய தேவை உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த மாநிலத்தில் பாஜக - காங்கிஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில் பல்வேறு கருத்துக் கணிப்புகளும் ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரிவித்தன. ஆனால் இரண்டு கட்சிகளுமே போட்டா போட்டியில் முன்னிலை பெற்றுள்ளன. இருப்பினும் பாஜக வே முன்னிலையில் உள்ளது.

  • Share on

சி.ஏ.ஏ., சட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவோம்... சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது - அமித்ஷா உறுதி

அயோத்தி ராமர் கோவில் நிறுவப்படும் ராமர் சிலையின் சிறப்பு தெரியுமா?

  • Share on