<p><b>தென்காசி  மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசுப் பேருந்தின் முன்பக்கம் நின்றவாறு பயணம் செய்த குடிபோதை ஆசாமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</b></p><p>ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர்  வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க ஆலங்குளம் சென்றுஇருக்கிறார்.<br></p><p>பொருட்களை வாங்கி பையில் போட்டதுடன் அப்படியே மதுவையும் வாங்கி வயிற்றுக்குள் ஊற்றி இருக்கிறார். </p><p>பின்னர்,எக்ஸ்பிரஸ் பேருந்தில் ஏறியவரை, கரும்புளியூத்தில் நிற்காது என்று கூறி நடத்துநர் இறக்கிவிட்டார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/02/14/11613307357.jpg" title="Vilasal news" style="width: 100%;"><br></p><p>மது போதையில் ஆவேசமடைந்த காளிமுத்து, பேருந்தை நகர விடாமல் தகராறு செய்து முன்னால் நின்றவாறு ஆபாசமாக ஓட்டுனரை வசைபாடத் தொங்கினார். </p><p>ஒரு கனத்தில் தொடர்ந்து பேருந்தின் முன்பக்கம் காளிமுத்து ஏறி நிற்கவே, அவரை பயமுறுத்துவதற்காக ஓட்டுநர் பேருந்தை சில அடி தூரம் இயக்கினார். அவர் பேருந்தை இயக்கியும் அவர் பயப்படாமல் பேருந்தில் நின்று கொண்டே இருந்துள்ளார். <br></p><p>உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு அவரை கீழே இறக்கிவிட்டார். இச்சம்பவத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>