தூத்துக்குடி வரை இரு விரைவு ரயில்கள் நீட்டிக்க வேண்டும் - மாவட்ட பயணியர் நலச்சங்கம் கோரிக்கை!
நிருபர்
October 18, 2023
தூத்துக்குடி வரை இரு விரைவு ரயில்கள் நீட்டிக்க வேண்டும் - மாவட்ட பயணியர் நலச்சங்கம் கோரிக்கை!
<p><b>தசரா பண்டிகையை ஒட்டி இரண்டு விரைவு ரயில்களை தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</b><br></p><p>தூத்துக்குடி மாவட்ட பயணியர் நலச்சங்க செயலாளர் பிரம்மநாயகம் தெற்கு ரயில்வே பொது மேலாருக்கு அனுப்பியுள்ள மனுவில்:- </p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா பண்டிகை திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்க பல்வேறு இடங்களில் இருந்தும் அதிக அளவில் மக்கள் வருவர். குறிப்பாக கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருவர். எனவே கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். </p><p>குறிப்பாக, திருநெல்வேலி - பாலக்காடு விரைவு ரயில் சேவையை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயிலையும் வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>