ஆறுமுகநேரி பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு!
நிருபர்
October 13, 2023
ஆறுமுகநேரி பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு!
<p><b>ஆறுமுகநேரி பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது</b></p><p>ஆறுமுகநேரி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்ததால், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இப்பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>அதன்படி, ஆறுமுகநேரி பகுதி மின்சார வாரிய பணியாளர்கள் உயர் அழுத்த மின் பாதையில் பழுதடைந்த மின்ஒயர்களை மாற்றி வருகின்றனர்.</p><p>மேலும், மின்கம்பிகள் தாழ்வாக செல்லும் பகுதிகளில் ஊடு மின்கம்பங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.</p><p>இப்பணி முடந்தவுடன் ஆறுமுகநேரி பகுதியில் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>