<p><br></p><p><b>தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கியதாக கையும், களவுமாக பிடிபட்டவர்கள் தான் அதிகம். அதிலும் பட்டா மாறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக லஞ்சம் வாங்கியதில் வருவாய்த்துறை முதலிடத்தில் உள்ளது.</b></p><p><br></p><p>அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் சில அதிகாரிகள், அலுவலர்களால் ஒட்டுமொத்த அரசு துறைகளுக்கும் தொடர்ந்து அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், போலீஸ், தீயணைப்பு என பாகுபாடின்றி லஞ்சம் ஊடுருவியுள்ளது.&nbsp;</p><p><br></p><p>நேற்று கூட தூத்துக்குடி அருகே வழிகாட்டி மதிப்பு அறிக்கைக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ எட்டுராஜ் என்பவர் அவரது அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><br></p><p>நேற்று முன்தினம் கூட ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிளான் அப்ரூவலுக்கு அனுமதி தர ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர் பற்குணன் கைது செய்யப்பட்டார்.</p><p><br></p><p>கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கிய வழக்குகளில் 2023 - 24ல் அதிகபட்சமாக 155 வழக்குகளை போலீசார் விசாரித்து வருகின்றனர். 2023 - 24ல் லஞ்சம் வாங்கியதாக வருவாய்த்துறையினர் மீது தான் அதிகபட்மாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் மின்வாரியம் மீது 26 வழக்குகள், ஊரக வளர்ச்சித்துறை 22, உள்ளாட்சி அமைப்புகள்&nbsp; 21 வழக்குகள், சர்வே 18, போலீஸ் 10, பத்திரப்பதிவு&nbsp; 8, சமூகநலத்துறை&nbsp; 4, வணிகவரித்துறை, கூட்டுறவு , வேளாண் , கல்வித் துறைகளில் தலா 1, மருத்துவத்துறை&nbsp; 2, தொழிலாளர் நலத்துறை&nbsp; 3 வழக்குகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.</p>