<p dir="ltr"><span style="font-size: 16px;"><b>காயல்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.</b></span><br></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினம் கொம் புத்துறையைச் சேர்ந்தவர்கள் மார்ட்டின் (வயது 50), பிளவேந்திரன் (60). மீனவர்களான இவர்கள் 2 பேரும் நேற்று அதிகாலையில் நாட்டு படகில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">கொம்புத்துறையில் இருந்து 16 கடல்மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென பலத்த காற்று வீசியது. இதில் நாட்டுப்படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் விழுந்த 2 மீனவர்களும் தத்தளித்தனர்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">அப்போது கடலில் மற்றொரு படகில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் விரைந்து சென்று மார்ட்டினை காப்பாற்றி, கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">கடலில் மாயமான பிளவேந்தி ரனை தேடும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.</span></p><p> </p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இதுகுறித்து திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் படகில் விரைந்து சென்று, மாயமான மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</span></p>