விளாத்திகுளம் அருகே கல்லூரி பேருந்து மோதி சிறுவன் பலி!
நிருபர்
November 12, 2021
விளாத்திகுளம் அருகே கல்லூரி பேருந்து மோதி சிறுவன் பலி!
<p dir="ltr"><b><span ;="" style="font-size: 16px;">விளாத்திகுளம் அருகே கல்லூரி பஸ் மோதி சிறுவன் பலியானார்</span><span ;="" style="font-size: 16px;">.</span></b><br></p><p>
</p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தையை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தேவாரம் (வயது 7). அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று மாலையில் மேல்மாந்தை கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;=""> அப்போது வேம்பாரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து தேவாரம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தேவராம் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். </span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இது குறித்து சூரங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் கல்லூரி டிரைவர் தூத்துக்குடி செவலை சேர்ந்த காசி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </span></p>