சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 பேர் கைது - 113 மதுபாட்டில்கள் பறிமுதல்
நிருபர்
November 13, 2021
சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 பேர் கைது - 113 மதுபாட்டில்கள் பறிமுதல்
<p dir="ltr"><span style="font-size:16px" ;=""><b>தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 113 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.</b></span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற் கொண்டதில் நேற்று (12.11.2021) தூத்துக்குடி தென்பாகம், விளாத்திகுளம், தூத்துக்குடி மது விலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 4 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 8 பேரை கைது செய்தனர்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;=""> அவர்களிடமிருந்து 113 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. </span><span style="font-size:16px" ;="">இது குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</span></p>