<p><b>தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியல் வாள், கத்தி, வீச்சு அருவாள் உள்ளிட்ட 23 ஆயுதங்களை சட்டவிரோதாமாக தயாரித்து வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</b><br></p><p>குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பதாக ஸ்ரீவைகுண்டம் காவல் துணை&nbsp; கண்காணிப்பாளர் வெங்கடேசனுக்கு&nbsp; கிடைத்த தகவலின் அடிப்படையில் குரும்பூர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார்.<br></p><p>&nbsp;அதனையடுத்து,&nbsp; ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் ஜீன்குமார், குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வளார் தாமஸ் தலைமையிலான தலைமைக் காவலர் செந்தில் ஆறுமுகம் மற்றும் காவலர்&nbsp; காளிமுத்து ஆகியோர் அடங்கிய போலீசார் (23.11.2020) அன்று கொட்டார்விளை அங்கமங்கலம் பகுதியில் ரோந்து சென்று, அப்பகுதியைச் சேர்ந்த சப்பானிமுத்து மகன் நாராயணன் (68) என்பவரை விசாரணை செய்தனர்.</p><p>விசாரணையில் அவரது கொள்ளுப்பட்டரையில் வாள், கத்தி, அரிவாள், பாக்கெட் அரிவாள், சின்ன வீச்சு அருவாள், வீச்சருவாள் உள்ளிட்ட 23 ஆயுதங்களை சட்டவிரோதமாக தயாரித்து வைத்திருப்பது தெரியவந்தது.&nbsp;<br></p><p>இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணனை கைது செய்து, அவரிடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.<br></p>