தாப்பாத்தி அகதிகள் முகாம் இ-டெண்டருக்கு எதிரான மனு தள்ளுபடி
நிருபர்
July 21, 2022
தாப்பாத்தி அகதிகள் முகாம் இ-டெண்டருக்கு எதிரான மனு தள்ளுபடி தூத்துக்குடி செய்திகள் Thoothukudi news local news லோக்கல் நியூஸ் online news online tamil news தமிழ் செய்திகள் தமிழ் நியூஸ்
<p><b>அகதிகள் முகாம் அமைக்கும் இ-டெண்டருக்கு எதிரான மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுசீலா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாமிற்காக 834 வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்காக இ-டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>இதன் நிபந்தனைகளால் உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. இதனால், உள்ளூர் பகுதி மக்களுக்கான வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இ-டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.</p><p>இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, 'தமிழக சட்டச பையில் தீர்மானம் நிறைவேற்றி அரசால் அறிவிக்கப்பட்டது. அரசின் நிதியில் இருந்து தான் கட்டப்படுகிறது.</p><p>ஊராட்சி ஒன்றியத்தின் நிதி செலவிடப்பட வில்லை. எப்படி டெண் டர் ஒதுக்குவது என்பதை அரசு தான் முடிவெடுக்கும். இதில், ஊராட்சி ஒன்றியத்திற்கு எந்த பங்கும் இல்லை' என்றார்.</p><p>இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இதில் தலையிட வேண்டிய தில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.</p>