<p>&nbsp;சாத்தான்குளம் விவகாரத்தில் காவலர்கள் முருகன்,&nbsp; வெயிலுமுத்து,&nbsp; தாமஸ் பிரான்சிஸ் மற்றும் முத்துராஜ் ஆகியோரின் ஜாமின் மனு மீதான விசாரணையை மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.&nbsp;<br></p><p>தூத்துக்குடி மாவட்டம்,&nbsp; சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ்,&nbsp; மகன் பெனிக்ஸ் ஆகியோர் இறந்த வழக்கில்,&nbsp; காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் காவலர்கள் முருகன்,&nbsp; வெயில் முத்து,&nbsp; தாமஸ் பிரான்சிஸ்,&nbsp; முத்துராஜ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.&nbsp;<br></p><p>அவர்கள் தங்கள் மனுவில்,&nbsp; " சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ்,&nbsp; மகன் பெனிக்ஸ் ஆகியோர் இறந்த வழக்கில் கைதாகி இப்போது மதுரை மத்திய சிறையில் உள்ளோம். ஐகோர்ட் கிளை உத்தரவு படி சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இப்போது சிபிஐ அதிகாரிகள் வழக்கை விசாரிக் கின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல்துறை,&nbsp; சிபிஐ அதிகாரிகள் சேகரித்து விட்டனர். விசாரணையும் முடிந்துள்ளது. எங்களுக்கு ஜாமின் வழங்கினால் தலைமறைவாக மாட்டோம், நீதிமன்ற விதிகளுக்கு கட்டுப்படுவோம்"&nbsp; என்று கூறியிருந்தனர்.&nbsp;<br></p><p>&nbsp;இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராக கால அவகாசம் கோரினார். இதனால் விசாரணை நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.<br></p>