தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில், S.I.R.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை நிரப்ப பொதுமக்களுக்கான உதவி மையங்கள், வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஏற்படுத்தப்பட்டு, அவை எங்கெல்லாம் உள்ளது என்ற தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 22.11.2025 சனிக்கிழமை அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை நிரப்பி வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் வாக்குரிமையை நிலைநாட்டுவீர் என வடக்கு மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



