சனி, ஞாயிறு உட்பட அனைத்து அரசு விடுமுறை நாட்களும் வரி வசூல் மையங்கள் செயல்படும் என தூத்துக்குடி மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"2024 25 ஆம் நிதியாண்டு வருகின்ற 31.03.2025 அன்று முடிவடையும் நிலையில் வரிவசூல் பணியினை தீவிரபடுத்தும் விதமாக பொது மக்கள் நலன் கருதி மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கணினி வசூல் மையங்களும் மார்ச் 31 வரை சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து தினங்களும், காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்படும்" என தெரிவித்துள்ளார்.




