<p><b>ஸ்ரீவைகுண்டம் அருகே 105 வயது முதியவர் ஒருவர் மரணம் அடைந்தார்.</b><br></p><p>ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தை அடுத்த ராமானுஜம்புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாசானம்-மாடத்தி தம்பதியின் மகன் தோத்தாத்ரி ராமானுஜம் (வயது 105). இவர் விவசாயம் செய்து வந்தார். பின்னர் அவர், கடந்த சில ஆண்டுகளாக தன்னை முழுவதுமாக ஆன்மிக பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.&nbsp;</p><p>இந்நிலையில், வயது முதுமை காரணமாக அவர் நேற்று&nbsp; மாலை வீட்டில் இயற்கை எய்தினார். அவரது உடல் அடக்கம் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. அவரது மனைவி பேச்சியம்மாள் (90).&nbsp;</p><p>இந்த தம்பதிக்கு மாசானம், ரெங்கன் ஆகிய 2 மகன்கள், அம்மாபொண்ணு, ரெங்கம்மாள் என்ற 2 மகள்கள் உள்ளனர்.&nbsp; இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தோத்தாத்ரி ராமானுஜத்துக்கு 7 பேரன்கள், 8 பேத்திகள், 8 பூட்டன்கள், 6 பூட்டிகள் இருக்கின்றனர்.</p>