<p><b>தூத்துக்குடிக்கு வருகை தந்த அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.</b><br></p><p>நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்து தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.</p><p>அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சராகவும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். </p><p>இந்நிலையில் இன்று தூத்துக்குடி வந்த அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.</p>