தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் விஷு மகாஜன் யார்? முழு விபரம்!
நிருபர்
April 02, 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் விஷு மகாஜன் யார்? முழு விபரம்!
<p><b>தமிழ்நாட்டை அடுத்து ஆளப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் மாற்றப்பட்டு, புதிய கலெக்டராக விஷு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.</b></p><p><br></p><p>1990 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி பிறந்த விஷு மகாஜன், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் இவரது பூர்வீகம். பிறந்தது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா. சண்டிகரில் 1 முதல் 7 வது வகுப்பு வரை தனியார் பள்ளியிலும், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மிலிட்டரி பள்ளியில் 8 முதல் 10 வது வகுப்பு வரையிலும், சண்டிகரில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு, ஐஐடி பாம்பேயில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றார்.</p><p><br></p><p>2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். ஈரோட்டில் பயிற்சி ஐஏஎஸ் ஆக தனது பணியை தொடங்கி, அதன் பின் சுமார் 2 ஆண்டுகள் சிதம்பரத்தில் சப் கலெக்டராக பணியாற்றினார். தொடர்ந்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணை மேலாண் இயக்குநராகவும் (நிதி) பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.</p>