<p><b>தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியராக விஷு மகாஜன் இன்று ( 03.04.2026 ) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாற்றப்பட்டு, புதிய ஆட்சியராக விஷு மகாஜன் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியராக விஷு மகாஜன் இன்று ( 03.04.2026 ) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.</p><p><br></p><p>1990 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி பிறந்த விஷு மகாஜன், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் இவரது பூர்வீகம். பிறந்தது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா. சண்டிகரில் 1 முதல் 7 வது வகுப்பு வரை தனியார் பள்ளியிலும், உத்தரகாண்ட்&nbsp; மாநிலம் டேராடூனில் உள்ள மிலிட்டரி பள்ளியில் 8 முதல் 10 வது வகுப்பு வரையிலும், சண்டிகரில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு, ஐஐடி பாம்பேயில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றார்.</p><p><br></p><p>2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். ஈரோட்டில் பயிற்சி ஐஏஎஸ் ஆக தனது பணியை தொடங்கி, அதன் பின் சுமார் 2 ஆண்டுகள் சிதம்பரத்தில் சப் கலெக்டராக பணியாற்றினார். தொடர்ந்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணை மேலாண் இயக்குநராகவும் (நிதி) பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.</p>