<p><b>சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பரபுரத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்டார் ஹாய்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில்&nbsp; மாவட்ட அளவிலான&nbsp; கிரிக்கெட் போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெற்றது.&nbsp;</b>&nbsp;<br></p><p>இப்போட்டியில் மாவட்ட அளவிலான 16 அணிகள் கலந்து கொண்டன. முதல் நாள் போட்டியை சாத்தான்குளம்&nbsp; ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி தொடங்கி வைத்தார். ஞாயிற்றுக்கிழமை&nbsp; நடந்த இறுதி போட்டியில்&nbsp; திசையன்விளை அணியை எதிர்த்து&nbsp; சிதம்பரபுரம் அணி மோதியது. இப்போட்டியை சாத்தான்குளம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சக்திவேல் முருகன் தொடங்கி வைத்தார்.</p><p>இதில் சிதம்பரபுரம் அணி முதல் பரிசும், திசையன்விளை இன்ஃபினிட்டி&nbsp; அணி இரண்டாவது பரிசும், காரங்காடு அணி மூன்றாம் பரிசு, உடன்குடி அணி நான்காவது பரிசும், காரி கோவில் அணி&nbsp; ஐந்தாவது பரிசு பெற்றது.</p><p>பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில்&nbsp; முதல் பரிசு பெற்ற சிதம்பரபுரம் அணிக்கு&nbsp; ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ சார்பில்&nbsp; வழங்கப்பட்ட ரூ.10,000 மற்றும் கோப்பையை மேற்கு வட்டாரத் தலைவர்&nbsp; சக்திவேல் முருகன் வழங்கினார்.&nbsp; இரண்டாம் பரிசு பெற்ற திசையன்விளை இன்ஃபினிட்டி&nbsp; அணிக்கு&nbsp; ஒன்றியக்குழு தலைவர்&nbsp; ஜெயபதி ரூ.7,000 மற்றும் வெற்றிக் கோப்பை வழங்கினார்&nbsp; . மூன்றாம் பரிசு பெற்ற காரங்காடு அணிக்கு ரூ.5,000 மற்றும் வெற்றிக் கோப்பையை இந்து முன்னணி பிரமுகர்&nbsp; பால்பாண்டி வழங்கினார். நான்காம் பரிசு பெற்ற உடன்குடி அணிக்கு தொழிலதிபர் ஹென்றி பாண்டியன் ரூ.3,000 மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கினார். ஐந்தாம் பரிசு&nbsp; பெற்ற&nbsp; காரி கோயில்&nbsp; அணிக்கு&nbsp; &nbsp;சிதம்பரபுரம் ஸ்டார் ஹாய்ஸ் அணியினர் ரூ.2000 வாங்கினர். சிறந்த ஆட்டக்காரர்களாக தேர்வு பெற்ற&nbsp; சிவக்குமார், ரவி சீதா ஆகியோருக்கு&nbsp; ஜெயக்குமார் பரிசு வழங்கினர்.</p><p>போட்டிக்கான ஏற்பாடுகளை ஸ்டார் ஹாய்ஸ் கிரிக்கெட் அணி ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.</p>